Thursday, September 23, 2021

திருக்குறள் - சிறுகை அளாவிய கூழ்

 திருக்குறள் - சிறுகை அளாவிய கூழ்


குழந்தைக்கு சோறு ஊட்டுவது இன்பம். குழந்தை ஒவ்வொரு கவளமாக உண்ணும் அழகே அழகு. அதன் சிறிய வாய், பல் இல்லாத அந்த பொக்கை வாய் அல்லது பல் முளைக்க இருக்கும் அந்த எயிறு, வாயின் ஓரம் வழியும் அந்த எச்சில்...எல்லாமே அழகுதான்.


சில சமயம் பிள்ளைக்கு சோறு ஊட்டும் போது, குழந்தையும் சோற்றில் கை வைத்து எடுத்து உண்ண பார்க்கும். அது கூட பரவாயில்லை. உணவு தோய்ந்த கையை நமக்கு ஊட்ட முயற்சி செய்யும். அதன், அந்த சின்ன கையில் ஒட்டியிருக்கும் ஓரிரண்டு பருக்கைகள்...அதற்கு அமுதமும் ஈடாகாது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்



பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_23.html


(Please click the above link to read further)



அமிழ்தினும் = அமுதத்தை விட 


ஆற்ற இனிதே = கொல்வதற்கு இனிதானது 


தம் மக்கள் = தங்கள் பிள்ளைகள் 


சிறுகை  = சிறிய கையில் 


அளாவிய கூழ் = விரவிய சோறு 



மூன்று விடயங்களை நாம் உன்னிப்பாக கவனித்தால், இன்னும் இரசிக்கலாம். 


முதலாவது, "தம் மக்கள்". நம்ம பிள்ளை கையில் அளாவிய சோறு தான் அமுதை விட இனிமையாக இருக்கும். பக்கத்து வீட்டு பிள்ளை சோறு நமக்கு இனிமையாக இருக்குமா? 


இரண்டாவது, "சிறு கை": கை அளாவிய என்று சொல்லவில்லை. சிறு கை என்று சொல்கிறார். நம் பிள்ளைதான் என்றாலும் முப்பது வயதில், சோற்றை அளாவித் தருகிறேன் என்றால் சுவைக்குமா? அந்த வயதில் அது சுவையாக இருக்கும். 


மூன்றாவது, "கூழ்". கூழ் என்பதற்கு சோறு என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். அதாவது மிக எளிமையான ஒரு உணவு கூட, குழந்தையின் கை பட்டால் அமுதம் மாதிரி இருக்கும் என்கிறார். 


அனுபவித்தால் அன்றிப் புரியாது. 


அனுபவித்தவர்கள், ஒரு முறை அதை நினைத்து புன்னகை பூக்கலாம். 


மற்றவர்கள், அந்த அனுபவத்துக்காக காத்து இருக்கலாம். 



3 comments: