Saturday, June 12, 2021

பெரிய புராணம் - முன்னுரை

 பெரிய புராணம் - முன்னுரை 


இறைவனை அடைய என்ன செய்ய வேண்டும் ?


நிறைய படிக்கணுமா? நிறைய தான தர்மங்கள் செய்யணுமா? கோவில் கோவிலாக போய் சாமி கும்பிடணுமா?  நாளும் கிழமையும் ஆனா விரதம், பூஜை எல்லாம் செய்யணுமா? மடியா, ஆசாரமா இருக்கனுமா? 


இது ஒன்றும் செய்யாமலேயே இறைவன் அடி சேர்ந்த தொண்டர்களின் வரலாற்றுத் தொகுப்புதான் பெரிய புராணம். 


எழுத்தறிவே இல்லாமல், சிவனுக்கு மாமிசம் படைத்தார் கண்ணப்பர். அதுவும் எப்படி, வாயில் நீரை கொண்டு வந்து சிவன் மேல் கொப்பளிபார். அது தான் அபிஷேகம். செருப்புக் காலை கொண்டு போய் சிவ லிங்கத்த்தின் மேல் வைப்பார். படைத்த மாமிசமும் எப்படி, வாயில் போட்டு கடித்துப் பார்த்து பதமாக இருக்கிறதா என்று அறிந்த பின், அந்த எச்சில் மாமிசம் தான் நைவேத்தியம். 


நம்ம வீட்டில் நைவேதியத்துக்கு என்று வைத்த வடையை சிறு பிள்ளைகள் எடுத்தால் கூட நாம் திட்டுவோம். "பூஜை முடிந்து தர்றேன்...அதுக்குள்ள என்ன அவசரம்" என்று. பிள்ளைக்கு கவனம் முழுவதும் வடை மேலேயே இருக்கும். 


மண் பாண்டம் செய்து விற்கும் குயவர், அவருக்கு கொஞ்சம் பெண் பித்து. மனைவி இருக்க பல பெண்களை நாடினார். அதை அறிந்த மனைவி, "என்னைத் தொடாதே" என்று தள்ளி வைத்து விட்டார். அவருக்கு முக்தி. 


இன்னொருவரோ, சாமி கும்பிடவே இல்லை. சுவர்க்கம் வேண்டும், வீடு பேறு வேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை.அவரை வீடு தேடி வந்து முக்தி தந்தார் சிவன். 


இன்னொருவர், சிவனை கூப்பிட்டு, "எனக்கு அந்த பெண் மேல் காதல். நீ போய் இந்த லவ் லெட்டரை நான் குடுத்தேன்னு குடுத்துட்டு வா" நு சிவனை courier boy யாக ஆக்கி விட்டார். அவருக்கும் முக்தி. 


இன்னொருவர், சிவன் ஒரு கடவுளே இல்லை. சைவம் ஒரு மதமே இல்லை என்றார். அவருக்கும் முக்தி. 


இப்படி பலதரப்பட்ட தொண்டர்களுக்கு முக்தி வழங்கிய வரலாறுதான் பெரிய புராணம். 


இவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை - பக்தி. அசைக்க முடியாத பக்தி. புரிந்து கொள்ள முடியாத பக்தி.  



https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_12.html


(Please click the above link to continue reading)


இப்படிதான் பக்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முற்றாக முறித்து எறிந்த இலக்கியம் பெரிய புராணம். எப்படி வேண்டுமானாலும் பக்தி செய்யாலாம் என்று எடுத்துச் சொன்னது பெரிய புராணம். 


என் மதம் உயர்ந்தது,  என் ஜாதி உயர்ந்தது, நான் செய்யும் பக்தியே உயர்ந்தது, கடவுளுக்கு நான் செய்வது தான் பிடிக்கும், ஆடு வெட்டுவது, மாடு வெட்டுவது எல்லாம் காட்டு மிராண்டித் தனம் என்று சொல்பவர்கள் முன்னால், பிள்ளையை வெட்டி கறி சமைத்து போட்ட தொண்டர் கதையை சொல்கிறது பெரிய புராணம். 


அன்பு ஒன்று தான் முக்கியம் என்று எடுத்துக் காட்டிய இலக்கியம் பெரிய புராணம். 


எனவே தான் அதற்கு "பெரிய " புராணம் என்று பெயர் வந்தது. 



சேக்கிழாரின் தமிழ்...அமிழ்தை விட இனிமையாக இருக்கும். படிக்க படிக்க நாவில் இனிப்பு ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு இனிமையான பாடல். 


பக்தி மணம் ஒரு புறம், கொஞ்சும் தமிழ் மறுபுறம். 


அற்புதமான பக்தி இலக்கியம். படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 


அதில் இருந்து சில பாடல்களை பார்க்க இருக்கிறோம். 


பார்ப்போமா?


4 comments:

  1. அருமை ...ஆவலாக காத்துள்ளோம் அண்ணா ..
    குறள் தொடர்கிறீர்கள் தானே !

    ReplyDelete
  2. மிக ஆவலாக காத்துள்ளோம் அண்ணா

    ReplyDelete
  3. இறைவன் மேல் பக்தி செய்வது என்ன பெரிய விஷயம்? அதைவிட மனிதன் மேல் அன்பு செய்வது மேலல்லவா?

    ReplyDelete
  4. இயற்பகை நாயனார் வரலாற்றை பதிவிட முடியுமா அண்ணா

    ReplyDelete