Monday, June 21, 2021

பெரிய புராணம் - காட்சியில் கண்ணினார்

 பெரிய புராணம் - காட்சியில் கண்ணினார் 


தகவல் தொழில் நுட்பம் (information technology ), உயிரியல் தொழில் நுட்பம் (bio technology ) என்று உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெரிய புராணம், திருக்குறள் என்று பழம் பாட்டு படிப்பதில் காலணாவுக்கு புண்ணியம் உண்டா? 


இதை எல்லாம் நேரம் செலவழித்து படித்து என்ன ஆகப் போகிறது? 


வளர்ச்சி என்றால் அது முழுவதுமாக இருக்க வேண்டும். உடலில் ஒரு பக்கம் மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது, இன்னொரு பக்கம் வளராமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எப்படி இருக்கும். 

வலது கை நாலு அடி நீளம், இடது கை இரண்டு அடி நீளம். வலது கால் மூணு அடி நீளம். இடது கல் ஒரு அடி நீளம் என்று இருந்தால் எப்படி இருக்கும். பக்க வாதம் வந்த மாதிரி இருக்கும் அல்லவா. வளர்ச்சி என்றால் அது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்க வேண்டும். 


மனிதர்கள் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கலவை. அறிவியல் வளர்ந்து கொண்டே போகிறது. மிக வேகமாக வளர்கிறது. அதை வளர்க பள்ளிகள், கல்லூரிகள், என்று இருக்கின்றன.


மனிதனின் உணர்வு சார்ந்த பகுதிகள் வளர என்ன வழி இருக்கிறது? 


இலக்கியமும், சமயமும் மனிதனின் உணர்வு சார்ந்த பகுதிகளை செம்மை படுத்தி வளர்க்க உதவும். உதவ வேண்டும். 


ஆனால், வருந்த்தத்தக்க  விடயம் என்ன என்றால், உரம் ஊட்ட வேண்டிய இலக்கியமும், மதமும், பெரும்பாலும் நஞ்சை ஊட்டுகின்றன. 


வேற்றுமையை வளர்த்து, பகையை உருவாக்கி, மலினமான பால் உணர்சிகளை தூண்டி பணம் பார்க்கும் வழிகளாக உருவாகி விட்டன. 


இதில் இருந்து தப்பி, நல்ல உயர்ந்த இலக்கியங்களை, பொருள் அழகும், சொல் அழகும், இலக்கிய நயமும், பண்பாடும், கலாச்சாரமும் செறிந்த உயர்ந்த இலக்கியங்களை தேடித் பிடித்து படிக்க வேண்டும். 


இல்லை என்றால், அறிவு வளரும். மனம் வளராது. 


இதை மனதில் கொள்ள வேண்டும். 


கதைக்கு வருவோம். 


கைலாய மலை. அருகில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் பூ பறிக்க இரண்டு தேவ லோக பெண்கள் வருகிறார்கள். அவர்கள் பூ பறிக்கும் போது, அங்கே சுந்தரரும் வருகிறார். அவர்களைப் பார்கிறார். 


அந்தப் பெண்கள் கண்ணிலும், சுந்தரர் கண்ணிலும் காதல் மலர்கிறது. 


நடந்தது அவ்வளவு தான். அதை சேக்கிழார் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள். 


பாடல் 


மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்

தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்

போது வாரவர் மேன்மனம் போக்கிடக்

காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_21.html


(Please click the above link to continue reading)


மாத வஞ்செய்த = பெரிய தவத்தை செய்த 


தென்றிசை  = தென் திசை (தமிழ் நாடு) 


வாழ்ந்திடத் = வாழ்ந்திட 


தீதி லாத் = தீமையை இல்லாது செய்யும் 


திருத் தொண்டத் தொகை = திருத் தொண்டத் தொகை  என்ற நூலை 


தரப் = தருவதற்காக 


போது வாரவர் = போது என்றால் மலர். மலர் கொய்ய வந்த அந்த இளம் பெண்கள் 


மேன் = மேல் 


மனம் போக்கிடக் = மனதை செலுத்த 


காதன் மாதருங் = காதல் கொண்ட அந்தப் பெண்களும் 


காட்சியிற் கண்ணினார். = கண்களால் அதை வெளிப்படுத்தினார் 


அவர் அந்தப் பெண்கள் மேல் மனம் செலுத்தக் காரணம் நமக்கு திருத் தொண்டர் தொகை என்ற நூலைத் தருவதற்காக என்கிறார் சேக்கிழார். 


அவர் காதலாக பார்பதற்கும், இந்த நூலுக்கும் என்ன சம்பந்தம்?


மேலும் சிந்திப்போம். 



No comments:

Post a Comment