Thursday, June 3, 2021

திருக்குறள் - நீத்தார் பெருமை - குணமென்னும் குன்றேறி நின்றார்

 திருக்குறள் - நீத்தார் பெருமை - குணமென்னும் குன்றேறி நின்றார்


பெரியவங்க சாபத்தை வாங்கக் கூடாது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


ஏன்? அவர்கள் சாபம் நம்மை என்ன செய்து விடும் ? அப்படியே ஒரு கெடுதல் வரும் என்றாலும், நம்மால் அந்த கெடுதலில் இருந்து காத்துக் கொள்ள முடியாதா என்றால், முடியாது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது (29)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_3.html


(pl click the above link to continue reading)


குணமென்னும் = நல்ல குணங்கள் என்ற 

குன்றேறி நின்றார் = குன்றின் மேல் ஏறி நின்றார் 

வெகுளி = அவர்களது கோபத்தை 

கணமேயும் = ஒரு நொடியேனும் 

காத்தல் அரிது  = காத்துக் கொள்ள முடியாது (29)


இது கொஞ்சம் நெளிவு சுளிவு உள்ள குறள். 


குணம் என்ற குன்று என்றால் என்ன?  நல்ல குணங்களை குன்றுக்கு உவமையாக சொல்கிறார். ஏன் என்றால், "சலியாமை கருதியும், பெருமை கருதியும்" என்கிறார் பரிமேலழகர். 


நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கும். ஆனால், ஏதாவது ஒரு சிக்கல் வந்தால், அந்த நல்ல குணத்தை விட்டு விடுவோம். 


இலஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்ற நல்ல குணம் இருக்கும். பிள்ளைக்கு நல்ல கல்லூரியில் கொஞ்சம் பணம் கொடுத்தால் இடம் கிடைக்கும் என்றால், கொடுக்காமல் இருப்போமா? 


"இங்க கட்டினா நூறு ரூபாய்...நீதி மன்றத்துக்குப் போனால் ஐநூறு ரூபாய்" என்றால் என்ன செய்வோம்?


முற்றும் துறந்தவர்கள் நல்ல குணங்களில் இருந்து ஒரு போதும் விலக மாட்டார்கள். மலை போல அசையாமால் இருப்பார்கள் என்று சொல்ல அதை உதாரணமாகச் சொன்னார். "சலியாமை"


இன்னொரு காரணம், "பெருமை". மலை போல் உயர்ந்து நிற்பது. 


சரி,


"கணமேயும் காத்தல் அரிது" என்றால் என்ன? 


எல்லா மனிதர்களுக்குள்ளும் சத்வம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்கள் இருக்கும்.  


எப்போதாவது தாமச குணம் மேலிட்டால், முனிவர்களுக்கும் கோபம் வரலாம். கோபமும், காமமும் உயிரின் இயற்கைக் குணங்கள். 


அப்படி அவர்கள் கோபப் பட்டால், யார் மேல் கோபம் கொள்கிறார்களோ, அவர்களால் அந்த கோபத்தின் உக்ரத்தை தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார். 


"அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. "


என்று முந்தைய குறளுக்கு உரை செய்தார் அல்லவா? 


முற்றும் துறந்த அந்த முனிவர்கள், வெகுண்டு கூறினால் அந்த கூற்றின் பலனை அது தராமல் விடாது என்றதால், யார் மேல் கோபம் கொண்டார்களோ, அவர்கள் அந்த கோபத்தின் உக்ரத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியாது என்று அர்த்தம். 


அதுக்குத்தான் சொல்வது, நல்லவர்கள் வாயில் விழக் கூடாது என்று. 





No comments:

Post a Comment