Thursday, September 5, 2013

திருக்குறள் - வழக்கும் தண்டனையும்

திருக்குறள் - வழக்கும் தண்டனையும்




அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்ற மூன்று கூறுகளை உடையது என்று  பார்த்தோம்.

அதில்

வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே 'எனது எனது' என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள் மேல் செல்வது. அது 'கடன் கோடல்' முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.

அதாவது வழக்கு என்பது ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எனக்கு எனக்கு என்று தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வது. 

அதில் 

தண்டமாவது, அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தக ஒறுத்தல்.

தண்டனை என்பது ஒழுக்க நெறிக்கும் , வழக்கு நெறிக்கும் ஒத்துப் போகாதவர்களை  அந்த வழியில் நிறுத்தும் பொருட்டு செய்வது. 

இன்றைய தண்டனை பற்றிய சிந்தனை என்னவென்றால் , ஒருவனுக்கு கொடுக்கப்  படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது.

பரிமேலழகர்   எழுதுகிறார்,தண்டனை என்பது வழி தவறியவர்களை சரியான  
வழியில் செலுத்த செய்யும் வழி முறைகள் என்று. 

அறம் என்பது பற்றி என்ன ஒரு தெளிவான சிந்தனை....!







No comments:

Post a Comment