Tuesday, August 16, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அறனாக்கம்

    

 திருக்குறள் - அழுக்காறாமை - அறனாக்கம் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்




)


பொறாமை படாதே, பொறாமை படாதே என்று சொன்னால் அது என்ன நம்மைக் கேட்டுக் கொண்டா வருகிறது?  "நான் வரவா" என்று கேட்டால், "வராதே" என்று சொல்லி விடலாம். ஆனால், உண்மையில் அது எங்கே நம்மைக் கேட்கிறது. அது பாட்டுக்கு வந்து மனதில் உட்கார்ந்து கொள்கிறது. 

நாம் என்ன செய்ய முடியும்? 


வள்ளுவர் அதற்கு ஒரு வழி சொல்கிறார். 


எந்த ஒரு வேலையை முதலில் செய்யும் போது கடினமாக இருக்கும். கடினமாக இருக்கிறதே என்று விட்டுவிட்டால் அந்த வேலை செய்யவே வராது. கடினமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அது மட்டும் அல்ல, அதிகமாகவும் செய்ய வேண்டும். 


உதாரணமாக, 


உடல் பயிற்சி செய்யத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதல் நாள் ஒரு கிலோ எடையை தூக்கினாலே கை வலிக்கும். விட்டு விடக் கூடாது. இரண்டு மூணு நாள் செய்ய வேண்டும். கை பழகி விடும். அப்புறம் கொஞ்சம் எடையை கூட்ட வேண்டும். புது எடை கை வலிக்கும். பின் சில நாளில்அது பழகி விடும். இப்போது முதல் நாள் செய்த ஒரு கிலோ எடையை தூக்கினால் மிக எளிதாக இருக்கும். 


கடினமான ஒன்று எப்படி எளிதானாது? அதை விட அதிகமான ஒன்றைச் செய்ததால் அது எளிமையானது. 


பொறாமை வருகிறதா? மற்றவன் ஆக்கம் கண்டு பொறாமை வருகிறதா? அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், அவன் ஆக்கத்தை போற்று, அதை மேலும் பெரிதாக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தி, பொறாமை போய் விடும் என்கிறார். 


அதை அவர் சொல்லும் விதம் இருக்கிறதே, நம்மால் சிந்தித்தும் பார்க்க முடியாது. அப்படி ஒரு அழகு. 


பாடல் 


அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


(Pl click the above link to continue reading)


அறனாக்கம் = அறனும், ஆக்கமும் 


வேண்டாதான் = வேண்டாம் என்று 


என்பான் = சொல்லுபவன் 


பிறனாக்கம் = பிறருடைய ஆக்கத்தை 


பேணாது = போற்றாமல் 


அழுக்கறுப் பான் = பொறாமை கொள்பவன் 


மிக ஆழமான குறள். 


அறனாக்கம் - இதற்கு பரிமேலழகர் செய்திருக்கும் உரை பிரமிக்க வைக்கக் கூடியது.  அதை அறன் + ஆக்கம் என்று இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். ஆக்கம் என்றால் செல்வம். செல்வம் இந்த இப்பிறவிக்கு பலன் தரக் கூடியது. அறம் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரக் கூடியது. எனவே அறனாக்கம் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பலன் தரக் கூடியவை. 


இப்படி இம்மைக்கும் பலன் வேண்டாம், மறுமைக்கும் பலன் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? 


சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றால் 


பிறன் ஆக்கம் பேணாது அழுக்காறு கொள்பவர்கள். 


இங்கே இரண்டு விடையத்தைக் கூறுகிறார். 


முதலில் மற்றவர்கள் ஆக்கத்தைப் பேண வேண்டும். பேணுதல் என்றால் பாதுகாத்தல், போற்றுதல் என்று பொருள்.  பக்கத்து வீட்டுக் காரனுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து இருக்கிறதா? அதை எப்படி நல்லபடியாக முதலீடு செய்து அதை அவன் மேலும் பெருக்க முடியும் என்று சிந்தித்து அதை அவனுக்கு சொல்ல வேண்டும். 


இரண்டாவது, அப்படிச் செய்யாமல் அதைக் கண்டு பொறாமை கொள்ளக் கூடாது. 


போற்றாமலும், பொறாமை கொண்டாலும் அவனுக்கு இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு பலனும் கிடைக்காது என்கிறார்.


யாருக்கு என்ன நன்மை கிடைத்தாலும் அதைக் கண்டு மகிழ வேண்டும். 


மற்றவர்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்.அந்த மகிழ்ச்சியை மேலும் பெருக்க உதவ வேண்டும். அது கண்டு நாமும் மகிழ வேண்டும். மனம் விரிய வேண்டும். 


அப்படிச் செய்தால் என்ன கிடைக்கும் - இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை கிடைக்கும். 


ஒரு குறளுக்குள் எவ்வளவு அர்த்தம்!


அறன், ஆக்கம் 

பிறன் ஆக்கம் 

பேணுதல் 

அழுக்காறு செய்பவன் 





No comments:

Post a Comment