Monday, August 22, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்

     

 திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


)


பொறாமை கொள்ளாதே என்று வள்ளுவர் சொல்கிறார்.  பொறாமை கொண்டால் என்ன ஆகும்? இன்னும் சொல்லப் போனால், கொஞ்சம் பொறாமை இருந்தால் தானே மற்றவர்கள் போல் நாமும் உயர முடியும்? அப்படிப் பார்த்தால் பொறாமை நல்லதுதானே? என்று கூட நாம் நினைப்போம். 


அது சரியல்ல. பொறாமை கொண்டால் இம்மைக்கு மட்டும் அல்ல மறுமைக்கும் துன்பம் தொடரும். எனவே, பொறாமை கொள்ளக் கூடாது என்கிறார். 


கீழே உள்ள குறளுக்கு பரிமேலழகர் செய்த உரை வியக்கத் தக்கது. 



பாடல் 

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


(Pl click the above link to continue reading)



அழுக்காற்றின் = அழுக்காறு, அதாவது பொறாமை காரணமாக 


அல்லவை செய்யார் = அறன் அல்லாதவற்றைச் செய்யார் 


இழுக்காற்றின் = தவறானவற்றின் 


ஏதம் = துக்கம், துன்பம் 


படுபாக்கு = உண்டாவது 


அறிந்து = அறிந்து 


பொறாமை கொள்வதால் வரும் துன்பத்தை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்யக் கூடாது என்பது பொதுப் பொருள். 


இதில் பரிமேலழகரின் நுணுக்கம் ஆச்சரியமானது.


பொறாமை கொள்வதால் வரும் துன்பங்களை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். யார் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிறார் பரிமேலழகர்.


"அறிந்து" என்று கூறியதால், அறிவுள்ளவர்கள் என்று உரை செய்கிறார். பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்று யாருக்குத் தெரியும்? அறிவு உள்ளவர்களுக்குத் தான் தெரியும். அது தெரியாமல் இருந்தால், அவன் அறிவற்ற மூடன் என்று பொருள். பொறாமை கூட நல்லதுதான் என்று யாராவது சொன்னால், அவன் அறிவு அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 


"ஏதம்" என்றால் துன்பம்.துக்கம். சில அறிவிலிகள் சொல்லக் கூடும் "துன்பப் பட்டால்தானே சுகம் அடைய முடியும். வேலை செய்வது துன்பம் தான். அதற்காக வேலை செய்யாமல் இருக்க முடியுமா? எனவே,முதலில் துன்பம் வந்தால் என்ன, பின்னால் இன்பம் வந்தால் சரிதான்" என்று கூறக் கூடும். பரிமேலழகர் கூறுகிறார் "இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும்" என்று. 


பொறாமை கொண்டால் ஒரு நாளும் இன்பம் வராது. எனவே பொறாமை கொள்வதில் அர்த்தமே இல்லை என்கிறார். 


நான் என மனதுக்குள் பொறாமை கொண்டால் யாருக்கு என்ன? நான் என்ன யார் பொருளையும் திருடுகிறேனா? மற்றவர்கள் மேல் வசை பாடுகிறேனா? ஒன்றும் இல்லையே. என் மனதுக்குள் பொறாமை எழுகிறது. அதில் யாருக்கு என்ன கெடுதல் என்று கேட்கலாம். 


"அல்லவை செய்யார்" என்பதற்கு பரிமேலழகர் "அறன் அல்லாதவற்றைச் செய்யார் என்கிறார். அறன் அல்லாதது எது என்றால் பிறருக்கு மன, மெய், மொழிகளால் தீங்கு செய்தலும், நினைத்தலும் ஆம் என்கிறார். 


யார் மேல் பொறாமை கொள்ளக் கூடாது என்றால் "கல்வியாலும், செல்வத்தாலும் உயர்ந்தவர்கள் மேல்" என்கிறார். 


எவ்வளவு நுணுக்கமான உரை. எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்கள். 


நம் சொத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கிறோம். 


 




No comments:

Post a Comment