Saturday, April 2, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடி நிழல் தடமன்றி யாமே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அடி நிழல் தடமன்றி யாமே 


தமிழ் இலக்கியத்திலே அந்தாதி என்று ஒரு வகை உண்டு. முதல் பாடலின் இறுதிச் சீர், அடுத்த பாடலின் முதல்சீராக வரும். 


அந்தம், ஆதியாகி வரும் அந்தாதி. 


திருமோகூரில் பாடிய பத்துப் பாடல்களும் அந்தாதியாக அமைந்தவை. .


முதல் பாடல் 'இலம் கதியே' என்று முடிந்தது. அது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


அடுத்த பாடல் 'இலம் கதியே' என்று தொடங்குகிறது. 


முதல் பாடலை மனப்பாடம் செய்து விட்டால் போதும். ஒன்றில் இருந்து அடுத்ததாக எல்லா பாடல்களும் நினைவில் வந்து விடும். 


'எங்களுக்கு வேறு கதி இல்லை. இன்று மட்டும் அல்ல, என்றுமே வேறு கதி இல்லை. எதை விட்டால் வேறு கதி இல்லை? ஆழ்வார் ஒரு நீண்ட அடை மொழியோடு அதைக் கூறுகிறார். 


பொய்கை (நீர் நிலை)யைத் தவிர வேறு கதி இல்லை. 

நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 

இப்போது மட்டும் அல்ல எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


வேறு கதி இல்லை இப்போது மட்டும் அல்ல எப்போதுமே இங்கு குளிர்ந்த துளசி மாலை சூடிய ஆயிரம் பெயரை உடைய அம்மான் புகழ் பாடும் நலம் பொருந்திய நான்மறையை போற்றும் வானவர்கள் வாழும் திருமோகூர் பெருமாளின் திருவடி நிழல் பொருந்திய பொய்கையைத் தவிர வேறு கதி இல்லை. 


பாடல் 

 

இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்


அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்


நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்


நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. (3892) 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_12.html


(pl click the above link to continue reading)



இலங்கதி = இல்லை கதி. கதி இல்லை 


மற்றொன் றெம்மைக்கும் = மற்றொன்று எப்போதும் 


ஈன் = இங்கே, ,இந்த 


தண் துழாயின் = குளிர்ந்த துளசியினால் ஆன 



அலங்கல் = மாலை 


அம் கண்ணி  = அவனைத் தவிர 


ஆயிரம் பேருடை அம்மான் = ஆயிரம் திரு நாமங்களை உடைய  அம்மான் 



நலங்கொள் =நல்லவற்றைக் கொள்ளும் 


நான்மறை = நான்கு வேதங்கள் 


வாணர்கள் = வானவர்கள் 



வாழ்திரு மோகூர் = வாழ்கின்ற திருமோகூர் 



நலங்க ழலவன் = பெருமாளுக்கு ஆழ்வார் சூட்டிய புதுப் பெயர். நலங்கழலவன். கழல் என்றால் திருவடி. ஆண்கள் காலில் அணியும் ஆபரணம் கழல். (பெண்கள் அணிவது கொலுசு). நன்மை தரும் திருவடி 


அடிநிழல் = திருவடியின் நிழல் 


தடமன்றி = பொய்கை அன்றி 


யாமே. = எமக்கு 



நலம் தரும் பொய்கை போன்ற திருவடி. 


குளம் இருக்கிறது. அதில் குளிர்ந்த நீர் இருக்கிறது. இனிய மலர்களின் வாசம் வருகிறது அதில் இருந்து. பார்க்க அழகாக இருக்கிறது. இந்த இன்பத்தை எல்லாம் அது யாருக்குத் தரும்?


எல்லோர்க்கும் தரும். 


படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, நல்லவவ்ன், கெட்டவன் என்றெல்லாம் பார்க்காது. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள நீரை முகர்ந்து பருகலாம். யார் தாகத்தையும் தீர்க்கும். 


அது போல் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். யார் வந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வான். 


அப்படி ஒரு திருவடி இருக்கும் போது வேறு என்ன வேண்டும். இதுவே போதும் என்கிறார் ஆழ்வார். 


---------- முதல் பாசுரம் கீழே உள்ளது -------------------------------------------------------------



தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்


நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்


தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்


காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. (3891)




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_31.html


No comments:

Post a Comment