Wednesday, April 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நமது இடர் கெடவே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நமது இடர் கெடவே 


ஆழ்வார்கள் பெருமாளை அனுபவிப்பது மாதிரி இன்னொரு சமயத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. 


இந்த salesman என்று சொல்லுவார்களே, அவர்களுக்கு வேலை கடை கடையாக தினம் சென்று யாருக்கு என்ன பொருள் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேட்டு அந்தப் பொருள்களை விற்பது. தினம் தினம் இதுதான் வேலை. 


ஆழ்வார் சொல்கிறார், பெருமாளும் ஒரு salesman மாதிரித்தான். இந்த உலகம் எல்லாம் உய்ய, பெருமாள் அலைந்து கொண்டே இருப்பாராம். யாருக்கு, எங்கு, என்ன உதவி வேணுமோ, அதை அங்கு போய்ச் செய்வாராம். "உழல்வான்" என்றே ஆழ்வார் குறிப்பிடுகிறார். அலைந்து கொண்டே இருப்பானாம். .


இப்படி அனைத்து உலகிலும் உயிர்களை காப்பாற்றுவதால், பிரம்மா, சிவன் மற்றைய தேவர்கள் எல்லோரும் பெருமாளிடம் வந்து "உன்னைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். 


அப்படிப்பட்ட பெருமாள் இருக்கும் திருமோகூர் என்ற திருத் தலத்துக்கு நாமும் செல்வோம். எதுக்கு அங்க போகணும் என்றால், நமது எல்லா இடர்களும் தொலைய என்கிறார். 


பாடல் 




அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட

வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்

நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. (3893)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_13.html


(pl click the above link to continue reading)



அன்றி = உன்னைத் தவிர 


யாமொரு = எங்களுக்கு ஒரு 


புகலிடம் இலம் = புகலிடம் இல்லை 


என்றென் றலற்றி = என்றெல்லாம் சொல்லிக் கொண்டு 


நின்று = நின்று 


நான்முகன் = பிரமன் 


அரனொடு = சிவனோடு 


தேவர்கள் நாட = தேவர்கள் நாடி வரும் 


வென்றி = வெற்றி கொண்டு 


இம் மூவுல களித்து  = இந்த மூன்று உலகங்களை காத்து 


உழல் வான் = அலைவான் (இதே வேலையா திரிவான்) 


திரு மோகூர் = திருமோகூர் என்ற திருத்தலம் 


நன்று= நல்லது 


நாமினி நணுகுதும் = இனிமேல் நாம் அங்கு போவோம் 


நமதிடர் கெடவே. = நமது இடர் கெடவே , நமது துன்பங்கள் தொலையவே 



நீங்களும் போயிட்டு வாங்க. இந்தா தான இருக்கு. 





No comments:

Post a Comment