Thursday, April 7, 2022

சிவஞான போதம் - சித்தாந்தம்

 சிவஞான போதம்   - சித்தாந்தம் 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆத்ம விசாரம், ஒரு தேடல் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. .


இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன, இந்த பிறப்பின் நோக்கம் என்ன, இறப்புக்குப் பின் என்ன நிகழும், கடவுள் உண்டா, இல்லையா, மறு பிறப்பு உண்டா, இல்லையா , இந்த உலகம் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது, யார் தோற்றுவித்தார்கள் என்று பலப் பல கேள்விகள் நம்முள் எழும்.


பாவம், புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா? 


இதற்கெல்லாம் எங்கே சென்று விடை காண்பது? இதுவரை இந்தக் கேள்விகளுக்கு யாராவது விடை காண முயன்று இருக்கிறார்களா? அல்லது இனிமேல் தான் முயற்சி தொடங்க வேண்டுமா?


ஏதேதோ தத்துவங்கள் சொல்கிறார்கள். அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எதைப் படிப்பது, எதை நம்புவது, ,எது சரி, எது தவறு என்று நாம் குழம்புகிறோம்.


இந்த அறிவுத் தேடலுக்கு ஒரு முடிவு இருக்கிறதா? அல்லது தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?


நமக்கு முன் இந்த கேள்விகள் மட்டும் அல்ல, ,இவற்றைவிட ஆழமான கேள்விகளை கேட்டு அவற்றிற்கு விடையும் கண்டு இருக்கிறார்கள். இனி அதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு முழுமையாக அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


அதுதான் சிந்தாந்தம் என்பது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_7.html


(click the above link to continue reading)



சித்தத்தின் அந்தம். அல்லது முடிவு. 


அறிவின் எல்லையை தொட்டு, இது தான் உண்மை என்று அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


சைவ சித்தாந்தத்தின் விளக்கம் தான் விளக்கம் தான் சிவ ஞான போதம். போதம் என்றால் அறிவு. 


அது என்ன சைவ சித்தாந்தம்?


இயற்பியல் (physics) படிக்கப் போனால் electron, neutron, proton என்ற அடிப்படை அணுத் துகள்களைக் கொண்டு இந்த உலகை விளக்கம் செய்வார்கள். 


காரணம் என்ன? 


இந்த அணுத் துகள்கள் மாறி மாறி வருவதுதான் உலகம். உலகில் உள்ள மற்ற பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அணுத் துகள்கள் மாறாது. 


நிலையில்லா இந்த உலகில் நிரந்தரமானது எது என்று சிந்தித்தார்கள். அதைப் பிடித்து விட்டால் இந்த உலகம் பிடிபட்டு விடும். 


அப்படி தேடி தேடி கடைசியில் மூன்று விடயங்கள் நிரந்தரமானவை என்று கண்டு கொண்டார்கள். அதுதான் அடிப்படைத் தத்துவம். அதைப்  புரிந்து கொண்டால், இந்த உலகைப் புரிந்து கொள்ள முடியும். 


அது என்ன மூன்று?


பதி, பசு, பாசம் 


என்ற மூன்று. இந்த மூன்றுதான் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை. 


இதைப் புரிந்து கொண்டால், மற்றது எளிது. 


இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


1 comment: