Monday, July 29, 2013

திருக்குறள் - அளவுக்கு மீறினால்

திருக்குறள் - அளவுக்கு மீறினால் 


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மயில் தோகையே (மயில் பீலி) ஆனாலும் அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும்.

இது என்னங்க குறள்  ? ரொம்ப லோடு ஏத்தினா வண்டியோட அக்சில் (axil ) உடையும்னு சொல்றதுக்கு வள்ளுவர் வேணுமா ? இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைப்போம்.

வள்ளுவரை அவ்வளவு எளிதாக எடை (!) போட்டு விடாதீர்கள்.

நம்ம வாழ்க்கையில நமக்கு எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை. அந்த சமயத்தில் ஏதாவது சொல்லி விடுவோம். நல்லவர்களையும் பகைத்துக் கொள்வோம். பின்னாடி யோச்க்கும் போது , "ஆமா, அவனோட நட்பு / உறவு இல்லாட்டி என்ன ஆகி விடும்....போனா போறான்..." என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம்.

இப்படி கொஞ்ச கொஞ்சமாய் எல்லோரையும் பகைத்துக் கொண்டாள், ஒரு நாள் அது நம் வாழ்க்கை என்ற தேரின் அச்சையே முறித்து விடும்.

சின்ன பகைதானே, என்று அலட்சியாமாக இருக்கக் கூடாது. சின்ன சின்ன பகைகள்  சேர்ந்துவிடும் ஒருநாள்.

அது போலத்தான் சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள்....

ஒரு சிகரெட் தானே, ஒரு நாளைக்கு இரண்டு கப் காப்பிதானே, வாரம் ஒரு ஐஸ் கிரீம் தானே, மத்தியானம் ஒரு மணிநேர தூக்கம் தானே என்று ஆரம்பிக்கும் சின்ன பழக்கங்கள் நாளடைவில் நம்மை கெடுக்கும்.


பல கெட்ட பழக்கங்கள் ஒன்று சேரும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஒவ்வொரு மயில் இறகும் மென்மையானது தான். ஆனால், மொத்தமாக சேரும்போது வண்டியையே முறிக்கும்.

அது போல பல கெட்ட குணங்கள் சேர்ந்து வாழ்கையை முறிக்கும்.

ஒரே ஒரு கெட்ட  பழக்கம் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.


 


1 comment:

  1. நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete